வெள்ளி, 23 மார்ச், 2012

ஓட ஓட தூரம் குறையலை....



என் பெயர் ராம்கிஷோர்.
நான் யுகேஜி படிக்கிறேன்.
பிடித்த பொழுதுபோக்கு. பைக் ஓட்டறது. கார் ஓட்டறது. என் தம்பி லட்டு என்கிற அருண்கார்த்திக்கோட சண்டை போடறது.
அப்பறம். பாட்டுப்பாடுவேன்.
பிடிச்ச பாட்டு: ஓட ஓட தூரம் குறையலை..
பிள்ளை நிலா.. இரண்டும் வெள்ளை நிலா..
ஸ்கூல் ரைம்ஸ் எல்லாம் மனப்பாடமா தெரியும்.
வீட்ல சைக்கிள் ஓட்டுவேன். அதில யார் ஓட்டறதுன்னு தம்பி கார்த்திக்குக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும். சண்டையில யார் ஜெயிப்பாங்கன்னா சில சமயம் நான் பல சமயம் கார்த்தி.
செல்லம்மா அவ்வான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். வெங்கடேஷ் தாத்தா அதிகம் பேசமாட்டார். அப்பா வேலைக்கு போயிடுவார். வேலைக்கு போறதுக்கு முன்னே தினம் எங்கரெண்ட பேரையும் பைக்ல ஒரு ரவுண்டு கூட்டிட்டு போயிட்டு வீட்ல விட்டுட்டு போவார். ராஜா சித்தப்பா வீட்ல வேலைக்கு போகாம விட்ல இந்தா என் தம்பியும் நானும் ஒரு வழி பண்ணிடுவோம்.
ஒரு நாளைக்கு 3 தடைவை சினிமா பார்ப்பேன். வீட்டு கம்ப்யூட்டர் படம் பார்க்கறது என் பொழுது போக்கு. சிவாஜி, எந்திரன், எங்கேயும் எப்போதும், பில்லா, கோ படங்களை 300 முறையாவது பார்த்திருப்போம்.

புதன், 21 மார்ச், 2012

எதிர்காலம் வளமாக அமைய!!!



உங்களின் எதிர்காலம் வளமாக அமைய சில வழிமுறைகள்....

நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் போட்டி என்பது தவிர்க்க முடியாததாகி இருக்கிறது. எனவே நல்ல வேலை ஒன்றை பெற்று சிறப்பாக செயல்படுவதுதான் உங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்வில் போற்றத்தக்க சிகரங்களை எட்ட உங்கள் வளர்ச்சியின் அடிப்படை ஆதாரமாக இருப்பது கல்விதான். எனவே நமக்குக் கிடைக்கக்கூடிய மற்றும் பொருந்தக்கூடிய கல்விதான் நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.

எதிர்காலத்தில் சிறப்பான வேலையை பெற சிறப்பான கல்வியே அவசியம். ஒருவருகுஞூகு பொருந்தக்கூடிய படிப்பை தேர்வு செய்வது எப்படி எனும் கேள்வி நமக்குள் வருவது இயல்புதான்.

இதைத்தீர்மானிப்பதில் சில அம்சங்கள் நம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதில் முக்கியமானவை..

1.மாணவர்களின் இயல்பான விருப்பம்

2. அவர்களின் கற்கும் திறன்

3.அவர் குடும்பத்தின் பொருளாதார நிலைமை

4.படிப்பின் காலஅளவு

5. உயர்கல்விக்கான வாய்ப்புகள்

6.கல்விநிறுவனம் அமைந்திருக்கிற இடம்

7.பாலினம்

8. படித்தவுடன் வேலை கிடைக்கும் என்கிற உறுதி

இந்தஅம்சங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கவே எந்த பெற்றோர்களும் விரும்புவார்கள். ஆனால், அனைவருக்கும் பொதுவான பதில்களை இதற்கு கூற முடியாது. தனிநபர்களைப் பொருத்தவரை இவை வேறுபடும். தங்களுடைய குழந்தைகளின் அடிப்படை விருப்பத்தைப் பற்றி யோசிக்காமல், நிறைவேறாமல் போன தங்களுடைய கனவுகளை குழந்தைகள் மூலமாக நனவாக்கவே பொதுவாக பல பெற்றோர்களும் விரும்புகிறார்கள்.

குழந்தை பிறந்தவுடனேயே டாக்டர், இன்ஜினியர், அக்கவுண்டண்ட்,பைலட், கப்பல் இன்ஜினியராக வரவேண்டும் என்றே சில பெற்றோர் முடிவு செய்கின்றனர். இதனால் அக்குழந்தை பெறக்கூடிய சிறந்த வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அடிப்படையில் பிரத்யேகமான விருப்பம் ஒன்றை பெற்றிருக்காத குழந்தைகளே இல்லை.ஒவ்வொரு கல்லிலும் ஒரு அழகிய சிற்பம் ஒளிந்திருப்பது பலருக்கு தெரிவதில்லை. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உள்ள சிற்பத்தை அடையாளம் கண்டு செதுக்கும் பொறுப்பு பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மற்றும் குழந்தைகளின் நலம் விரும்பிகளின் கையில் தான் இருக்கிறது. அவர்களே குழந்தைகளின் சிற்பிகள்.

ஒரு குழந்தைக்கு பொருந்தாத துறையில் அது தள்ளப்படம் போது , தண்ணீர் விழுந்ததும் நீச்சல் தெரியமால் தவிப்பதைப்போல அது தனக்கு பிடிக்காத , பொருந்தாத துறையில் விருப்பமற்று தத்தளிக்கத் துவங்குகிறது. வாழ்க்கை முழுவதும் இதை நினைத்து வருந்துகிறார்கள். இதை பெற்றோர்களும் விரும்புவதில்லை. ஆனால்,தங்களது குருட்டுத்தனமான அபிப்ராயங்களால் குழந்தை தடுமாறி தவிப்பதற்கு அவர்கள் காரணமாவதை அவர்களே அறிவதில்லை.

குழந்தைகளின் ஆர்வம் மற்றும் விருப்பங்கள் அறியப்படுவது எளிய சில முறைகளால் தான். தற்போது , சில நிறுவனங்கள் இதற்கான சைக்கோமெட்ரிக் தேர்வுகளை நடத்துகின்றன. இணையதளங்களும் இதில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு ஆன்லைனில் மாணவர்கள் விடையளித்தால், அதிலிருந்து அவர்களது அடிப்படை ஆர்வம் எந்த துறையில் இருக்கிறது என்பதை இந்ததளங்கள் அடையாளம் காட்டுகின்றன. இந்தசேவைக்கு சில இணையதளங்கள் கிரெடிட் கார்டு மூலம் கட்டணமும் வசூலிக்கின்றன. சில இணையதளங்களில் இந்த சேவைகளை இலவசமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

கணிதம் , உயிரியல், வேதியியல், கம்ப்யூட்டர் அடிப்படை ஆங்கிலம், பொதுஅறிவு மற்றும் இயற்பியல் ஆகியவற்றில் எதில் உங்களுடைய குழந்தைகள் இயற்கையாகவே ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்

இதுபோன்ற ஆன்லைன் தேர்வுகளல் கலந்துகொள்ள கடுமையாக தயார் செய்ய வேண்டியதில்லை. பள்ளிக் கணிதம் மற்றும் அறிவியலை லேசாக புரட்டினாலேப் போதும். இந்ததுறை வல்லுநர் ஒருவரிடம் நேரடியாக சென்றும் அறிந்து கொள்ளலாம்.

இயற்கையான ஆர்வம் , விருப்பம் மற்றும் மனநிலையானது ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. சிலர் எண்களோடு உறவாட விரும்பகிறார்கள். சிலர் மக்களோடு கலந்திடவும் பேசவும் விரும்புகிறார்கள். பிறருக்கு உதவுவதே சிலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வேறு சிலருக்கு ராணுவப்பணியே லட்சியமாகிறது. சிலருக்கு கம்ப்யூட்டர்கள் உத்வேகம் தருகின்றன.

இன்னும் சிலருக்கு படிப்பை சொல்லித்தருவதே பசியை போக்குக்கிறது. கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவதே சிலரின் கனவாக இருக்கிறது என்றால், டாக்டருக்கு படிப்பதே லட்சியம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இசையில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு இசையே படிப்பாக மாறுவதும், கணக்கில் ஆர்வம் இல்லாதவர்கள் பொறியியல் துறைகளுக்கு இலக்காவதும் எதிர்மறை விளைவுகளையே தரும். இதை தவிர்த்திட வேண்டும்.

கணிக்கம் திறன், சவாலான மனப்பான்மை , கிரியேட்டிவிட்டி வண்ணங்களில் ஆர்வம், புதுமைகளில் ஆர்வம், மொழி ஆர்வம், டிஜிட்டல் திறன் ஆகியவை ஒருவரின் துறையை தேர்வு செய்வதில் உதவக்கூடிய அம்சங்கள் ஆகும். பரந்துபட்ட மனிதமனங்களின் ஆர்வத்தையும், விருப்பத்தையும் இவைகள் காட்டுகின்றன.

இதை அலட்சியம் செய்து ஒரு குழந்தையின் இலக்கை தீர்மானித்தால் அவர்களின் எதிர்கால கல்விப் பயணம் எளிதாகிறது. ஆனால், அத்துறையில் அவர்களின் எதிர்காலம் சிறந்தமுறையில் அமைவது சாத்தியமில்லாமல் போகிறது. மேலும் ஒருவர் ஒரே விருப்பத்தை கொண்டிருப்பார்கள் என்று கருதமுடியாது. எனவே படிப்பில் சேரும் முன் தமக்கு எந்ததுறையில் ஆர்வம் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு விரும்பிய படிப்பைத் தொடர்ந்தால் உங்களுடைய எதிர்காலத்தை வளமானதாக மாற்றிக் கொண்டு வாழ்க்கை என்கிற வெற்றிப்படிக்கட்டில் தைரியமாக முன்னேறலாம்.

பயர் இன்ஜினியரிங் துறை





தீ விபத்துக்களிலிருநுஞூது தடுக்கும் முறைகளை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்திடும் துறை பயர் இன்ஜினியரிங் .
தேவையற்ற தீ விபத்துக்களிலிருந்து கட்டடங்களையும் வாழ்வாதாரங்களையும் மனித உயிர்களையும் பாதுகாக்கும் கலையம்சம் கொண்ட விஞ்ஞானப்பிரிவே பயர் இன்ஜீனியரிங் எனப்படுகிறது. தீ உருவாகக் காரணங்கள் , தீ விபத்து ஏற்படும் போது அங்குள்ள மனிதர்களின் போக்கு , தீ விபத்தின் விளைவுகள் , தீ விபத்தை தடுக்கும் உபகரணங்களாகிய அலாரம், ஸ்பிரிங்ளர் அளைப்புகள் போன்ற அனைத்தும் இத்துறையுடன் தொடர்புடையது தான். மனித உயிர்களையு ம் , உடமைகளையும் காக்கும் பணியாக இருப்பதால் இத்துறை மகத்துவம் வாய்ந்த துறையாக கருதப்படுகிறது.

பயர் இன்ஜினியரிங் துறையில் அபாயகரமான சவால்கள் அதிகம் உள்ளன. தவிர பொதுச்சேவையில் தவறாத ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே இதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற முடியும். தீ விபத்துகளைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பை வழங்குவதே இத்துறையின் தலையாய பணியாக இருக்கிறது. தீவிபத்து ஏற்பட்டுவிடும் சமயத்தில் விபத்தினால் ஏற்படும் இழப்பை முடிந்த அளவு குறைப்பவர்களும் இத்துறையினர் தான். தீ விபத்துகளைத் தடுக்கும் உபகரணங்களில் தேவைக்கேற்ற மாறுதல்களைக் கொண்டு வருபவர்களும் இவர்கள் தான்.

பயர் இன்ஜினியரிங் துறையில் ஷிப்ட் முறையில் பணியாற்றுவது சாதாரணமான ஒன்று . தீக்காயம், புகையை சுவாசிப்பது, தீயைத்தடுக்கும் வேதிப்பொருட்களைக் கையாளுவது போன்ற சூழ்நிலையை இவர்கள் கையாள வேண்டி உள்ளது. எனவே சமூக அக்கறை கொண்டவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள் . பயர் இன்ஜினியரிங் துறையில் இணைபவர்கள் பொறுமை, தன்னம்பிக்கை, ஒழுக்கம், வேகம், மற்றும் விவேகம் , நம்பிக்கை, குழுவாகப்பணியாற்றும் தன்மை ஆகியவற்றைப் பெற்றிருப்பது முக்கியம். புவியியல் ரீதியான தகவல்களை அறிந்தவராகவும் இருப்பது முக்கியம்.
தீயின் வகைகள் , தீ அணைக்கும் முறைகள் , தீயிலிருந்து பாதுகாக்கும் முறைகள் மற்றும் உபகரணங்களைப் பற்றியும் அறிந்திருப்பது அவசியம்.

இந்த துறையில் உள்ள படிப்புகள்:

பயர் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., எம்.இ., ஆய்வுப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு என பல நிலைப்படிப்புகள் உள்ளன. பி.இ., பயர் இன்ஜினியரிங் படிக்க பி.எஸ்.சி., வேதியியல் பட்டப்படிப்பை இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களுடன் படித்திருக்க வேண்டும். வயது 19 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
பொதுவாக இது மூன்றரை ஆண்டுகாலப் படிப்பாகும். கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் படிப்பு முடித்தவர்கள் பயர் இன்ஜினியரிங் படிப்பில் சேரலாம். பிளஸ் 2 வேதியியல், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் இத்துறையின் சான்றிதழ் படிப்பில் சேரலாம்.

உடற்தகுதி: இத்துறைக்கான அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுவது நல்ல உடற்தகுதிதான். மேலும் குறைந்தபட்ச உயரமாக 160 செ.மீ., இருக்கவேண்டும். மார்பளவு 81 செ.மீ., இருப்பதுடன் குறைந்தது 5 செ.மீ., விரிவடைதாகவும் இருக்க வேண்டும். கண்ணாடி அணியாதவராக இருக்க வேண்டும். என்றும் எதிர்ப்பார்க்கபடுகிறது.

பணிவாய்ப்புகள்: பயர் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் தீயணைப்புப் பிரிவுகளில் பணிவாய்ப்புகளைப் பெறலாம். மேலும், கல்வி நிறுவனங்களின் தீயணைப்பு பிரிவுகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம். மேலும், கல்வி நிறுவனங்கள், கன்சல்டிங் நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் பயர் இன்ஜினியரிங் படித்திருப்பவருக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மாபெரும் உற்பத்தி நிறுவனங்கள் , பெட்ரோலியக் கிணறுகள், டெக்ஸ்டைல் துறை, இயற்கை விவசாயத்துறை , வேதிப்பொருள் தயாரிப்பகங்கள் போன்ற வற்றிலும் வாய்ப்புகள் உள்ளன. கட்டுமான நிறுவனங்கள் , இன்சூரன்ஸ் நிறுவனங்கள் , விமானத்துறை, எரிபொருள் தொடர்பான உற்பத்தித்துறை போன்றவற்றிலும் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. இத்துறையின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக திகழ்வது நாக்பூரிலுள்ள நேஷனல் பயர் சர்வீஸ் கல்லுõரி ஆகும். இதில் மூன்றரை ஆண்டு கால பி.இ., படிப்பு தரப்படுகிறது.

ரோபோடிக்ஸ் துறை




ரோபோடிக்ஸ் என்ற வார்த்தையை ப்பற்றி அறியுமுன் ரோபோ என்ற வார்த்தையின் பொருளை அறிவது முக்கியம். ரோபோ எனப்படுவது கட்டுப்படுத்தப்பட்ட தானாக இயங்கக்கூடிய ,மறுபடி மறுபடி புரொக்கிராம்களை மாற்றத்தக்க பல வகை பயன்பாடு கொண்ட இயந்திரமாகும்.
இந்த இயந்திரங்கள் தொழில் அரங்குகளில் தானாகவே செயல்படும் பயன்பாடுகளுக்கு பெரிதும் உபயோகப்படுகின்றன. ரோபோக்களின் உள்ளார்ந்த தன்மையின் காரணமாக தற்போது உலகெங்கும் பிரசித்தி பெற்று இவை விளங்குகின்றன. மிகவும் அபாயகரமான சூழலிலும் ரோபோக்கள் துல்லியமாகவும் மீண்டும் மீண்டும் இயங்கும் தன்மையைப் பெற்றிருப்பதால் அவை முக்கியமான பணிகளைச்செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
ரோபோக்களை வடிவமைப்பது ,பராமரிப்பது, புதிய பயன்பாடுகளை <உருவாக்குவது, ஆய்வுகளில் ஈடுபடுவது போன்றவற்றுடன் தொடர்புடைய துறையே ரோபோடிக்ஸ் துறை. ரோபோக்களை கம்ப்யூட்டர்களின் உதவியோடு கட்டுப்படுத்துவது , தகவல் பெறுவது, தகவலைப்பயன்படுத்துவது போன்றவற்றுடன் தொடர்புடைய பொறியியலின் ஒரு பிரிவாக இது உள்ளது. ரோபோ அமைப்புகள் மானிபுலேட்டர், ரோபோ கைகள், இயங்கும் ரோபோக்கள், நடக்கும் ரோபோக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது,டெலிரோபோக்கள், மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் அமைப்புகள் என்று பலவகை ரோபோக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இதற்கு அடிப்படை கல்வித்தகுதி என்ன?
ரோபோடிக்ஸ் துறையில் எலக்டரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பல பிரிவுகளின் பயன்பாடுகள் செயல்படுத்தப்படுவதால் துறையில் இணைய விரும்புபவர்களுக்கு இன்ஜினியரிங் பின்புலமும் திறமையும் இருக்கவேண்டும்.
தகுதி என்ன?
÷ற்கெனவே கூறியது போல இந்ததுறையில் சிறப்பாக மிளிர, சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் திறன்கள் அவசியமாகத் தேவைப்படுகிறது. கம்ப்யூட்டர், ஐ.டி., மெக்கானிக்கல் , மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் ஆகியவற்றில் ஒன்றில் பி.டெக்.,பி.இ., படித்திருப்பது பொருத்தமான தகுதியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட ஏழு ஐ.ஐ.டி.,க்களிலும் பல இன்ஜினியரிங் கல்லுõரிகளிலும் ரோபோடிக்ஸ் மற்றும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பணி வாய்ப்புகள்
ரோபோடிக்ஸ் துறையானது வேகமாக வளர்ந்து வரும் நவீன அறிவியல் துறையாகும். எனவே இது அபரிமிதமான பணிவாய்ப்புகளைக் கொண்டுள்ளது. தற்சமயம் இப்படிப்புகளை முடித்தவர்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான ரோபோக்களை தயாரிப்பது மற்றும் தேவைக்கேற்ப பணிபுரியும் ரோபோக்களை வடிவமைப்பது ஆகிய பணிகளைச் செய்கிறார்கள். வெடிகுண்டுகளை அகற்றும் ரோபோக்கள், வீடுகளில் உபயோகப்படும் வாக்வம் கிளீனர்கள் போன்றவை ரோபோக்களின் வகையைச் சேர்ந்த மாறுபட்ட வடிவங்களாகும் . ரோபோக்களை ப்பற்றிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலமாக புதியபுதிய ரோபோ பயன்பாடுகளை உருவாக்கி எதிர்காலத்தை வளமாக்க பல்வேறு வாய்ப்புகளும் இருக்கின்றன.
சம்பளம் எப்படி?
இந்தியாவில் ரோபோடிக்ஸ் படிப்புகளைப் படிப்பவர்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது. இந்ததுறை இந்தியாவில் அசுர வளர்ச்சியைக்கண்ட வருகிறது. இந்ததுறையில் கணிசமான சம்பளம் பெறலாம். இந்ததுறையில் இணைபவர்கள் துவக்கத்திலேயே மாதம் ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 40 ஆயிரம் வரை பெறலாம். பொதுவாக இந்ததுறையில் படித்து முடித்தவர்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் மிக நல்ல சம்பளத்தைத் தருகின்றன.
எங்கே படிக்கலாம்?
டில்லி, மும்பை,கான்பூர், சென்னை, கவுகாத்தி.காரக்பூர் மற்றும் ரூர்க்கியிலுள்ள ஐ.ஐ.டி., க்கள் , தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் , ஐதாராபாத் பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்த துறையை சார்ந்த படிப்புகளைப் படிக்கலாம்.

அடுத்து என்ன படிக்கலாம்?



பிளஸ் 2 முடிச்சாச்சு! மேற்படிப்புக்கு என்ன செய்யவேண்டும்?
பிளஸ் 2 முடிச்சாச்சு. லீவும் விட்டாச்சு! என்று ஹாயாக பொழுதை போக்கும் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த கல்லுõரியில சேரலாம், நாம் சேர்ந்து படிக்கப்போகும் கல்லுõரி நல்ல கல்லுõரி தானா? நன்றாக சொல்லிக் கொடுப்பார்களா? அங்கே நாம் படிப்பதற்கான வசதிகள் எல்லாம் நல்ல முறையில் இருக்கிறதா? ஆனாலும் நாம் கட்டும் பீஸ்க்கு ஏற்றமாதிரி எல்லா வசதிகளும் இருக்கிற கல்லுõரி தானா? அங்கே படிப்பை தாண்டி நம் திறமைகளை வளர்க்க வேறு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது? இப்படி பல கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டிய நேரம் இது. பணம் செலவழித்து படிக்க வைக்கும் பெற்றோர்களே கல்லுõரிகளைப்பற்றி விசாரித்து நம்மை சேர்த்து விடுவார்கள் என்று சிறுவயது பள்ளிமாணவர்களைப்போல இருந்து விடக்கூடாது. அதே நேரம் தினமலர் நாளிதழ் நடத்துகிற வழிகாட்டி கல்விக் கண்காட்சிக்கும் சென்று நிறைய தகவல் குறிப்புகளையும் வாங்கிக்கொண்டு வந்திருப்பீர்கள். கண்காட்சியின் அரங்கத்தில் பல கல்வியாளர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கேட்டிருப்பீர்கள். அதோடு இன்ஜினியரிங் படிப்பில் லேட்டஸ்ட் டிரண்டு என்ன? சட்டம், மருத்துவம், விவசாயம் சார்ந்த கல்வியை படிப்பதால் என்னபயன், கல்விக் கடன் வாங்குவது எப்படி போன்ற பல பயனுள்ள ஆலோசனைகளை சொல்லக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சொன்ன ஆலோசனைகளை கேட்டு அதோடு விட்டுவிடாமல் நாம் படிக்கப்போகும் பாடம் பற்றியும், பயிலும் கல்லுõரி பற்றியும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமைந்திருக்கிறது இந்த விடுமுறைக்காலம்.
இனி வருகிற ஆண்டுகளில் தொடரப்போகும் நான்கு வருடப் படிப்பை முடித்துவிட்டு பிறகு பார்க்கப் போகிற வேலைதான் நம் காலத்திற்கும் , வாழ்க்கைக்கும் உதவும். அதற்கு நாம் தேர்ந்தெடுக்கற வேலை அதற்கான ஆதார படிப்பை தேர்வு செய்ய வேண்டிய முக்கியமான காலம் இது. அடுத்து என்ன படிக்க வைக்கலாம். தேர்வில் என்ன மதிப்பெண்கள் வாங்குவீர்கள் என்கிற எதிர்ப்பார்ப்பில் பெற்றோர்கள் காத்திருக்க. அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முடிந்தளவு மாணவர்களும் தங்கள் பங்கை செலுத்தலாம். அதற்கான குறிப்புகளும், கேள்விகளும் தான் இங்கே....
பிளஸ்2 முடித்துள்ள மாணவர்கள் அனைவரும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி சிந்திக்கத்தொடங்க வேண்டும்.அடுத்துப் படிக்கப்போகும் கல்லுõரி எப்படி இருக்க வேண்டும் என்பதை மாணவர்கள் முடிவு செய்ய வேண்டும். எதிர்காலப்பாதை வகுக்கப்படுவது இங்குதான். விண்ணப்பங்களை வாங்கிக் குவிப்பதற்கு முன்பு யோசிக்க வேண்டிய நல்ல நேரம் இது.
பலர் பிளஸ் 1 மற்றும் அதற்கு முன்பாகவே தாங்கள் எந்ததுறையில் வளர வேண்டும் என்பதைப்பற்றி முடிவு செய்கிறார்கள். என்றாலும் தற்போதுள்ள தகுதி, திறன், அடிப்படையில் தனக்கு எது பொருத்தமானது என்பதற்கான இறுதி முடிவை இப்போது எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
அடுத்து என்ன படிக்கவேண்டும் என்பதை முடிவு செய்து விட்டு அது தொடர்பான தகவல்களை மாணவர்கள் சேகரிக்க வேண்டும். அடுத்து நான்கு முதல் ஆறு ஆண்டுகளுக்கு மாணவர்கள் இதன் அடிப்படையிலேயே படிக்க வேண்டியிருக்கும் என்பதால் இதை மாணவர்கள் முக்கியமாக கருத வேண்டும். ஒரு படிப்பு பிரபலமாக இருப்பது என்பதற்காக அந்தபடிப்பை மாணவர்கள் தேர்வு செய்யக்கூடாது.அதேப்போல,தன்னுடைய நண்பன் ஒரு குறிப்பிட்ட கல்லுõரியில் சேரப்போகிறான் நாமும் அதே கல்லுõரியில் சேர்ந்து விடுவோம் என்றும் எண்ணிவிடக்கூடாது. காரணம் இருவரும் வாங்குகிற மதிப்பெண்கள் வேறுவேறுதானே. அதையும் மனதில் கொள்ளவேண்டும்.
ஒரு குறிப்பிட்ட படிப்பு தொடர்பான விஷயத்தின் தனக்குள்ள திறன் அடிப்படையில் தான் முடிவு செய்ய வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களால் சாதிக்க முடியாத விஷயத்தை பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களை நிர்பந்திக்கக்கூடாது . கல்லுõரிகளை தேர்வு செய்யும் போது அந்தக் கல்லுõரி அங்கீகாரம் பெற்ற கல்லுõரியாக இருக்கிறதா? என்பதைப்பார்க்கவேண்டும்.
வகுப்பறைகள் , நிர்வாக கட்டடம் , ஒர்க்ஷாப் , கம்ப்யூட்டர் லேப், இன்ஜினியர் லேபிள் லேபில் நவீன உபகரணங்கள் போன்ற <உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும்.

பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தகுதிகள், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு டடையிலான விகிதம் , சிறப்பு வருகை பேராசிரியர்கள் õகியவற்றை கவனிக்க வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளின் படி ஆசிரியர்களின் தகுதிகளை கல்லுõரி தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
கல்லுõரி வளாகத்தில் ஆய்வுக்கூட வசதிகள் இருக்கின்றனவா என்பதை கவனிக்க வேண்டும்.
நுõலகம் , இணையதளம், இன்ட்ராநெட், விடுதி அறைகள், கருத்தரங்கம், மருத்துவ வசதிகள், மாணவர் குழுக்கள், உடற்பயிற்சி கூடம் போன்ற பொதுவசதிகள் சிறப்பாக இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும்.
கல்லுõரியில் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வாறு முயற்சி மேற்கொண்டார்கள் எப்தை பார்க்கவேண்டும்.கல்லுõரியின் தரம் , மாணவர்களின் தகவல் தொடர்ப த்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட மென்திறன் மேம்பாடு ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.
தனிநபர்களின் வளர்ச்சியில் கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள் உதவுகின்றன. õண்டுவிழாக்கள், விளையாட்டு விழாக்கள், மாணவர் குழுக்கள், செமினார், இண்டஸ்ட்ரியல் டிரைனிங், சமூக நடவடிக்கைகள், என்.சி.சி ., மற்றும் என்.எஸ்.எஸ்., போன்றவை மாணவர்களின் திறனை ÷ம்படுத்துகின்றன.

கல்லுõரி பெரிய சாப்ட்வேர் நகரத்தின் அருகில் இருப்பது பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு உதவும் என்றாலும் இட அமைவை விட கல்லுõரியின் தரம் மிக முக்கியம்.
கல்லுõரியில் சேர்ந்து படித்து முடிக்கும் வரை கட்டணம் முக்கியத்துவம் வாய்ந்தது. கல்லுõரியில் அரசு விதித்த கட்டணத்தை விட மறைமுகமாக ஏதும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். கல்லுõரியில் சேரும் முன் அந்தக்கல்லுõரியை பார்த்துவிட வேண்டும். தற்போது படித்துவரும் மற்றும் படித்து முடித்த மாணவர்களிடம் கல்லுõரி பற்றி கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். தேர்வு முடிவு பற்றிய தகவல்கள் , அங்கீகாரம் விரபங்களை பல்கலைக்கழகத்தில் பார்வையிடலாம். கல்லுõரியை நடத்துபவர்களின் லட்சியம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது ஏராளமான சுயநிதி இன்ஜினியரிங் கல்லுõரிகள் வந்துவிட்டன. கவுன்சிலிங் போது எந்த கல்லுõரியை தேர்வு செய்வது என்பதில் குழுப்பம் அடையாமல் இருக்க இது போன்ற தகவல்களை முன்னரே அறிந்து கொள்வது நல்லது.

திங்கள், 12 மார்ச், 2012

மூர்த்தி சிறியது! கீர்த்தி பெரியது!!







யங் ஜீனியர்ஸ்
கீர்த்தன்
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்பார்கள்.அப்படி இத்தனை சிறிய வயதில் தன் பெற்றோர்களின் துணையுடன் கீர்த்தன் செய்யும் சாதனைகள் அபாரம். அவனது திறமைகள் பற்றி அவனது அம்மா கலவாணியிடம் பேசினோம். தன்மகனின் திறமைகள் பற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட விசயங்கள் இதோ...* உங்களுடையகுடும்பம் பற்றி சொல்லுங்க?எங்களுக்கு சொந்தஊர் சேலம் தான். நான் ஹவுஸ்வொய்ப் தான். எம்ஏ இங்கிலீஸ் லிட்ரேச்சர் படிச்சிருக்கேன். என் கணவர் எத்திராஜுலு டிராவல் ஸ் வெச்சிருக்கறதால சேலத்துக்கு வந்திட்டோம் . அவர் எம்பிஏபடிச்சிருக்கார். என்மகன்பெயர் கீர்த்தன். பத்துவயசுதான் ஆகுது. இப்போ நாலாம் வகுப்பு சேலத்தில இருக்கிற செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில படிக்கிறான்.
* உங்களுடைய குழந்தைகள் அவர்களுடைய திறமைகள் பற்றி சொல்லுங்கள்?எங்க பையனுக்கு யுகேஜி படிக்கறப்ப ஸ்விமிங்க் பழக்கினோம் மூணு முறை பத்துவயசுக் குள்ளே கலந்துக்கறவங்க கேட்டகிரியில மாவட்ட அளவிலான போட்டிகள்ல முதல் பரிசு வாங்கியிருக்கான். அதேசமயம் ஸ்கூல்லயும் ஸ்கேட்டிங் இருந்தது. அதில ஆர்வம் வரவும் அதையும் கத்துக்க வெச்சோம். நாலாம்வகுப்பு படிக்கறப்ப மாவட்ட அளவில கலந்துக்கிட்டு நாலாம் இடத்துக்கு வந்தான். அப்போதே இசையில ஆர்வம் இருந்தது. தொடர்ந்து செஸ்ல, கேரம்போர்டுல ஆர்வம் செலுத்தி கத்துக்க ஆரம்பிச்சான். ஐந்தாம் வகுப்பு படிக்கறப்ப செஸ்ல மூணாவது இடத்துக்கு வந்தான். மாநில அளவில ஐந்தாவது இடத்துக்கு வந்தான். இசையில ஆர்வம் இருந்ததால டிரினிட்டி காலேஜ் ஆப்மியூசிக் ல சேர்த்து விட்டோம். அந்த இசைக்கல்லுõரிக்கு தமிழகம் முழுக்க பல கிளைகள் இருக்கு. அதனுடைய தலைமையகம் லண்டன்ல இருக்கு. இப்போ கீர்போர்டுலயும், பியானோவிலும் ஐந்தாவது கிரேடு முடிச்சிருக்கான். மொத்தம் எட்டு கிரேடு இருக்கு. அதை எல்லாம் முடிச்சா இசையமைப்பாளராகலாம். ஒவ்வொரு கிரேடுக்கும் எக்சாம் இருக்கு. இதுவரை ஒவ்வொரு கிரேடிலும் 85சதவிகிதம் மார்க் எடுத்திருக்கிறான். ஹாரீஸ் ஜெயராஜோட மாமா என்.சுரேந்திரன் தான் எங்க பையனுக்கு மியூசிக் டீச்சர். அதேமாதிரி படிப்பிலயும் படுசுட்டி. என்றவர். அவனுடைய வயசுக்கு இந்த திறமைகள் எல்லாம் அதிகம் தான்.கடவுளோட அனுக்கிரகம்னு தான் சொல்லணும். இதுதவிர ஓவியங்கள் வரைவான். இசையில பெரிய அளவுக்கு கொண்டு வரணும். என்றவர் தன்னுடைய மகளைப்பற்றி சொல்லத் தொடங்கினார். என் பொண்ணு பவன்யா எல்கேஜி படிக்கிறா. ஆங்கிலம் , தமிழ்ல நல்லா பேசுவா. எங்களுக்கு ஆங்கிலம் தெரியுங்கறதால சரளமா பேசுவா. மேடைபயம் கொஞ்சம் கூட அவளுக்கு கிடையாது. என்கிறார் பெருமிதத்துடன்.