புதன், 21 மார்ச், 2012

பயர் இன்ஜினியரிங் துறை





தீ விபத்துக்களிலிருநுஞூது தடுக்கும் முறைகளை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்திடும் துறை பயர் இன்ஜினியரிங் .
தேவையற்ற தீ விபத்துக்களிலிருந்து கட்டடங்களையும் வாழ்வாதாரங்களையும் மனித உயிர்களையும் பாதுகாக்கும் கலையம்சம் கொண்ட விஞ்ஞானப்பிரிவே பயர் இன்ஜீனியரிங் எனப்படுகிறது. தீ உருவாகக் காரணங்கள் , தீ விபத்து ஏற்படும் போது அங்குள்ள மனிதர்களின் போக்கு , தீ விபத்தின் விளைவுகள் , தீ விபத்தை தடுக்கும் உபகரணங்களாகிய அலாரம், ஸ்பிரிங்ளர் அளைப்புகள் போன்ற அனைத்தும் இத்துறையுடன் தொடர்புடையது தான். மனித உயிர்களையு ம் , உடமைகளையும் காக்கும் பணியாக இருப்பதால் இத்துறை மகத்துவம் வாய்ந்த துறையாக கருதப்படுகிறது.

பயர் இன்ஜினியரிங் துறையில் அபாயகரமான சவால்கள் அதிகம் உள்ளன. தவிர பொதுச்சேவையில் தவறாத ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே இதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற முடியும். தீ விபத்துகளைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பை வழங்குவதே இத்துறையின் தலையாய பணியாக இருக்கிறது. தீவிபத்து ஏற்பட்டுவிடும் சமயத்தில் விபத்தினால் ஏற்படும் இழப்பை முடிந்த அளவு குறைப்பவர்களும் இத்துறையினர் தான். தீ விபத்துகளைத் தடுக்கும் உபகரணங்களில் தேவைக்கேற்ற மாறுதல்களைக் கொண்டு வருபவர்களும் இவர்கள் தான்.

பயர் இன்ஜினியரிங் துறையில் ஷிப்ட் முறையில் பணியாற்றுவது சாதாரணமான ஒன்று . தீக்காயம், புகையை சுவாசிப்பது, தீயைத்தடுக்கும் வேதிப்பொருட்களைக் கையாளுவது போன்ற சூழ்நிலையை இவர்கள் கையாள வேண்டி உள்ளது. எனவே சமூக அக்கறை கொண்டவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள் . பயர் இன்ஜினியரிங் துறையில் இணைபவர்கள் பொறுமை, தன்னம்பிக்கை, ஒழுக்கம், வேகம், மற்றும் விவேகம் , நம்பிக்கை, குழுவாகப்பணியாற்றும் தன்மை ஆகியவற்றைப் பெற்றிருப்பது முக்கியம். புவியியல் ரீதியான தகவல்களை அறிந்தவராகவும் இருப்பது முக்கியம்.
தீயின் வகைகள் , தீ அணைக்கும் முறைகள் , தீயிலிருந்து பாதுகாக்கும் முறைகள் மற்றும் உபகரணங்களைப் பற்றியும் அறிந்திருப்பது அவசியம்.

இந்த துறையில் உள்ள படிப்புகள்:

பயர் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., எம்.இ., ஆய்வுப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு என பல நிலைப்படிப்புகள் உள்ளன. பி.இ., பயர் இன்ஜினியரிங் படிக்க பி.எஸ்.சி., வேதியியல் பட்டப்படிப்பை இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களுடன் படித்திருக்க வேண்டும். வயது 19 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
பொதுவாக இது மூன்றரை ஆண்டுகாலப் படிப்பாகும். கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் படிப்பு முடித்தவர்கள் பயர் இன்ஜினியரிங் படிப்பில் சேரலாம். பிளஸ் 2 வேதியியல், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் இத்துறையின் சான்றிதழ் படிப்பில் சேரலாம்.

உடற்தகுதி: இத்துறைக்கான அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுவது நல்ல உடற்தகுதிதான். மேலும் குறைந்தபட்ச உயரமாக 160 செ.மீ., இருக்கவேண்டும். மார்பளவு 81 செ.மீ., இருப்பதுடன் குறைந்தது 5 செ.மீ., விரிவடைதாகவும் இருக்க வேண்டும். கண்ணாடி அணியாதவராக இருக்க வேண்டும். என்றும் எதிர்ப்பார்க்கபடுகிறது.

பணிவாய்ப்புகள்: பயர் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் தீயணைப்புப் பிரிவுகளில் பணிவாய்ப்புகளைப் பெறலாம். மேலும், கல்வி நிறுவனங்களின் தீயணைப்பு பிரிவுகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம். மேலும், கல்வி நிறுவனங்கள், கன்சல்டிங் நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் பயர் இன்ஜினியரிங் படித்திருப்பவருக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மாபெரும் உற்பத்தி நிறுவனங்கள் , பெட்ரோலியக் கிணறுகள், டெக்ஸ்டைல் துறை, இயற்கை விவசாயத்துறை , வேதிப்பொருள் தயாரிப்பகங்கள் போன்ற வற்றிலும் வாய்ப்புகள் உள்ளன. கட்டுமான நிறுவனங்கள் , இன்சூரன்ஸ் நிறுவனங்கள் , விமானத்துறை, எரிபொருள் தொடர்பான உற்பத்தித்துறை போன்றவற்றிலும் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. இத்துறையின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக திகழ்வது நாக்பூரிலுள்ள நேஷனல் பயர் சர்வீஸ் கல்லுõரி ஆகும். இதில் மூன்றரை ஆண்டு கால பி.இ., படிப்பு தரப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக