புதன், 21 மார்ச், 2012

எதிர்காலம் வளமாக அமைய!!!



உங்களின் எதிர்காலம் வளமாக அமைய சில வழிமுறைகள்....

நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் போட்டி என்பது தவிர்க்க முடியாததாகி இருக்கிறது. எனவே நல்ல வேலை ஒன்றை பெற்று சிறப்பாக செயல்படுவதுதான் உங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்வில் போற்றத்தக்க சிகரங்களை எட்ட உங்கள் வளர்ச்சியின் அடிப்படை ஆதாரமாக இருப்பது கல்விதான். எனவே நமக்குக் கிடைக்கக்கூடிய மற்றும் பொருந்தக்கூடிய கல்விதான் நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.

எதிர்காலத்தில் சிறப்பான வேலையை பெற சிறப்பான கல்வியே அவசியம். ஒருவருகுஞூகு பொருந்தக்கூடிய படிப்பை தேர்வு செய்வது எப்படி எனும் கேள்வி நமக்குள் வருவது இயல்புதான்.

இதைத்தீர்மானிப்பதில் சில அம்சங்கள் நம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதில் முக்கியமானவை..

1.மாணவர்களின் இயல்பான விருப்பம்

2. அவர்களின் கற்கும் திறன்

3.அவர் குடும்பத்தின் பொருளாதார நிலைமை

4.படிப்பின் காலஅளவு

5. உயர்கல்விக்கான வாய்ப்புகள்

6.கல்விநிறுவனம் அமைந்திருக்கிற இடம்

7.பாலினம்

8. படித்தவுடன் வேலை கிடைக்கும் என்கிற உறுதி

இந்தஅம்சங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கவே எந்த பெற்றோர்களும் விரும்புவார்கள். ஆனால், அனைவருக்கும் பொதுவான பதில்களை இதற்கு கூற முடியாது. தனிநபர்களைப் பொருத்தவரை இவை வேறுபடும். தங்களுடைய குழந்தைகளின் அடிப்படை விருப்பத்தைப் பற்றி யோசிக்காமல், நிறைவேறாமல் போன தங்களுடைய கனவுகளை குழந்தைகள் மூலமாக நனவாக்கவே பொதுவாக பல பெற்றோர்களும் விரும்புகிறார்கள்.

குழந்தை பிறந்தவுடனேயே டாக்டர், இன்ஜினியர், அக்கவுண்டண்ட்,பைலட், கப்பல் இன்ஜினியராக வரவேண்டும் என்றே சில பெற்றோர் முடிவு செய்கின்றனர். இதனால் அக்குழந்தை பெறக்கூடிய சிறந்த வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அடிப்படையில் பிரத்யேகமான விருப்பம் ஒன்றை பெற்றிருக்காத குழந்தைகளே இல்லை.ஒவ்வொரு கல்லிலும் ஒரு அழகிய சிற்பம் ஒளிந்திருப்பது பலருக்கு தெரிவதில்லை. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உள்ள சிற்பத்தை அடையாளம் கண்டு செதுக்கும் பொறுப்பு பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மற்றும் குழந்தைகளின் நலம் விரும்பிகளின் கையில் தான் இருக்கிறது. அவர்களே குழந்தைகளின் சிற்பிகள்.

ஒரு குழந்தைக்கு பொருந்தாத துறையில் அது தள்ளப்படம் போது , தண்ணீர் விழுந்ததும் நீச்சல் தெரியமால் தவிப்பதைப்போல அது தனக்கு பிடிக்காத , பொருந்தாத துறையில் விருப்பமற்று தத்தளிக்கத் துவங்குகிறது. வாழ்க்கை முழுவதும் இதை நினைத்து வருந்துகிறார்கள். இதை பெற்றோர்களும் விரும்புவதில்லை. ஆனால்,தங்களது குருட்டுத்தனமான அபிப்ராயங்களால் குழந்தை தடுமாறி தவிப்பதற்கு அவர்கள் காரணமாவதை அவர்களே அறிவதில்லை.

குழந்தைகளின் ஆர்வம் மற்றும் விருப்பங்கள் அறியப்படுவது எளிய சில முறைகளால் தான். தற்போது , சில நிறுவனங்கள் இதற்கான சைக்கோமெட்ரிக் தேர்வுகளை நடத்துகின்றன. இணையதளங்களும் இதில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு ஆன்லைனில் மாணவர்கள் விடையளித்தால், அதிலிருந்து அவர்களது அடிப்படை ஆர்வம் எந்த துறையில் இருக்கிறது என்பதை இந்ததளங்கள் அடையாளம் காட்டுகின்றன. இந்தசேவைக்கு சில இணையதளங்கள் கிரெடிட் கார்டு மூலம் கட்டணமும் வசூலிக்கின்றன. சில இணையதளங்களில் இந்த சேவைகளை இலவசமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

கணிதம் , உயிரியல், வேதியியல், கம்ப்யூட்டர் அடிப்படை ஆங்கிலம், பொதுஅறிவு மற்றும் இயற்பியல் ஆகியவற்றில் எதில் உங்களுடைய குழந்தைகள் இயற்கையாகவே ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்

இதுபோன்ற ஆன்லைன் தேர்வுகளல் கலந்துகொள்ள கடுமையாக தயார் செய்ய வேண்டியதில்லை. பள்ளிக் கணிதம் மற்றும் அறிவியலை லேசாக புரட்டினாலேப் போதும். இந்ததுறை வல்லுநர் ஒருவரிடம் நேரடியாக சென்றும் அறிந்து கொள்ளலாம்.

இயற்கையான ஆர்வம் , விருப்பம் மற்றும் மனநிலையானது ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. சிலர் எண்களோடு உறவாட விரும்பகிறார்கள். சிலர் மக்களோடு கலந்திடவும் பேசவும் விரும்புகிறார்கள். பிறருக்கு உதவுவதே சிலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வேறு சிலருக்கு ராணுவப்பணியே லட்சியமாகிறது. சிலருக்கு கம்ப்யூட்டர்கள் உத்வேகம் தருகின்றன.

இன்னும் சிலருக்கு படிப்பை சொல்லித்தருவதே பசியை போக்குக்கிறது. கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவதே சிலரின் கனவாக இருக்கிறது என்றால், டாக்டருக்கு படிப்பதே லட்சியம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இசையில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு இசையே படிப்பாக மாறுவதும், கணக்கில் ஆர்வம் இல்லாதவர்கள் பொறியியல் துறைகளுக்கு இலக்காவதும் எதிர்மறை விளைவுகளையே தரும். இதை தவிர்த்திட வேண்டும்.

கணிக்கம் திறன், சவாலான மனப்பான்மை , கிரியேட்டிவிட்டி வண்ணங்களில் ஆர்வம், புதுமைகளில் ஆர்வம், மொழி ஆர்வம், டிஜிட்டல் திறன் ஆகியவை ஒருவரின் துறையை தேர்வு செய்வதில் உதவக்கூடிய அம்சங்கள் ஆகும். பரந்துபட்ட மனிதமனங்களின் ஆர்வத்தையும், விருப்பத்தையும் இவைகள் காட்டுகின்றன.

இதை அலட்சியம் செய்து ஒரு குழந்தையின் இலக்கை தீர்மானித்தால் அவர்களின் எதிர்கால கல்விப் பயணம் எளிதாகிறது. ஆனால், அத்துறையில் அவர்களின் எதிர்காலம் சிறந்தமுறையில் அமைவது சாத்தியமில்லாமல் போகிறது. மேலும் ஒருவர் ஒரே விருப்பத்தை கொண்டிருப்பார்கள் என்று கருதமுடியாது. எனவே படிப்பில் சேரும் முன் தமக்கு எந்ததுறையில் ஆர்வம் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு விரும்பிய படிப்பைத் தொடர்ந்தால் உங்களுடைய எதிர்காலத்தை வளமானதாக மாற்றிக் கொண்டு வாழ்க்கை என்கிற வெற்றிப்படிக்கட்டில் தைரியமாக முன்னேறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக