வியாழன், 5 ஏப்ரல், 2012

பரதத்தில் அசத்தும் வினிஷாகதிரவன்







சமீபத்தில் தான் வினிஷாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. ஆனால், பல வருடங்களாக தொடர்ந்து ஆடி புதிதாக ஒரு கதையின் வர்ணத்திற்கு ஆடியவரைப் போல தன்னுடைய முதல் அரங்கேற்றத்திலேயே வந்திருந்த அத்தனை பார்வையாளர்களையும், பிரபலங்களையும் தன்னுடைய அபிநயங்களால் மெய்மறக்க வைத்திருந்தார் வினிஷாகதிரவன். அவருடன் ஒரு சந்திப்பு.

*உங்களுடைய குடும்ப பிண்ணனி பற்றி சொல்லுங்க?
நான் வித்யாலயா ஸ்கூல்ல படிக்கிறேன். அப்பா கதிரவன் வினிஷா விஷன்னு விளம்பர கம்பெனி வெச்சிருக்கார். அம்மா ஜெயசுதா வீட்டிலிருந்து எங்களை கவனிச்சுக்கறாங்க. ஒரே ஒரு தம்பி ரோகித் ஐந்தாம் வகுப்பு சின்மயா ஸ்கூல்லயே படிக்கறான். வீட்ல எனக்கும் சரி தம்பிக்கும் சரி அப்பா எங்களை முழுமையாக எதிலும் ஈடுபட அனுமதிப்பார். தம்பி கீ போர்டு கத்துக்கறான்.

* உங்களுடைய பரதநாட்டிய அரங்கேற்றம் பற்றி சொல்லுங்க?
பரதத்தில என்னுடைய குரு ஊர்மிளா சத்யநாராயணன். நான் யுகேஜி படிச்சதிலேயிருந்து இதுவரைக்கும் ஒன்பது வருசமா பரதம் கத்துக்கிட்டு வர்றேன். இதுதவிர சங்கீதமும் கத்துக்கிறேன். என்னுடைய சங்கீதகுரு லட்சுமி. என்னுடைய பரதநாட்டிய அரங்கேற்றத்திற்காக மூன்று வாரங்கள் தொடர்ந்து ராமர்கதைக்காக பயிற்சி எடுத்துக்கிட்டேன். அரங்கேற்றத்தில டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா கம்போஸ் பண்ணின புஷ்பாஞ்சலிக்கு ஆடினேன். தொடர்ந்து ராமர் கதை"பாவயாமி ரகுராமம்'ங்கற வர்ணத்துக்கு ஆடினேன். இந்த ராமர் கதை 45 நிமிடங்கள் தொடர்ந்து ஆடணும் . ராமர் வில்லை வளைச்சு சீதையை கல்யாணம் பண்ணிக்கறது. கூனியோட வஞ்சகம்.அதனால ராமர் கைகேயி÷ப்சசைக்கேட்டு நாட்டைவிட்டு சீதை,லட்சுமணனோட வனவாசம் போறது . அங்கே சுக்ரீவனை சந்திக்கறது. தொடர்ந்து அனுமனை இலங்கைக்கு அனுப்பறது, ராவணனோட போர் செய்யறது, முடிவுல ராமர் ஜெயிச்சு அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகம் செய்யறவரைக்கும் அத்தனை கதாபாத்திரங்களையும் நான் ஒருத்தியே மேடையில அபிநயத்தோட செய்து ஆடிக் காட்டினேன். என்னை இந்தளவுக்கு வழிநடத்தி சொல்லித்தந்தது என்னுடைய குரு ஊர்மிளா சத்யநாராயணன்.

* பரதம் தவிர வேறெந்த துறைகள்ல உங்களுக்கு ஆர்வம்?
பாடறதில ஆர்வம் . சரணம் ஐய்யப்பா, தன்வந்தரி ஆராதனைங்கற ஆல்பத்திற்காக பாடியிருக்கேன். இததவிர பள்ளிகள்ல நடக்கிற விழாக்கள்ல பாடி நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். விளம்பரங்களுக்கு குரல் கொடுத்திருக் கேன், யோகா செய்வேன்,பள்ளியில நடக்கிற விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்துக்கிட்டு நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்.

*உங்க அரங்கேற்றத்துக்கு வந்த விஐபிகள் என்ன சொல்லி வாழ்த்தினாங்க?
டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, வைஜெயந்திமாலாபாலி, மனோ, மஹதி, உன்னிகிருஷ்ணன், ஓ.எஸ்.அருண், ஜானகி, உமா முரளி கிருஷ்ணன், மதன்பாப், பாண்டு, இசையமைப்பாளர் தேவா சார்ல்லாம் வந்து வாழ்த்தினாங்க. அவங்க வாழ்த்திப்பேசினதில என்னால மறக்க முடியாததுன்னு சொன்னா, கூனியோட அசைவுகள், நடை,உடை பாவனைகள் அவளுடைய வயதான தோற்றம் இந்தசின்ப் பொண்ணோட முகத்தில மேக்கப் இல்லாம உணர்த்தின பாவனைகள்லயே புரிஞ்சுக்கு முடிஞ்சது. " கன்னியாகுமரி அம்மனே வந்து நேர்ல ஆடினது மாதிரி இருந்ததுன்னு பாடகி ஜானகி பாராட்டிச் சொன்னாங்க. " பூர்வஜென்மத்தொடர்பு இருந்தாதாத்தான் இப்படி ஆடி எல்லோரையும் மெய்மறக்க வைக்கமுடியும்னு உமா முரளிகிருஷ்ணா(பாடகி ஜானகியின் மருமகள் ) சொன்னாங்க. இது எனக்கு மோதிரக்கையால் குட்டுபட்டு ஆசிர்வாதம் வாங்கின மாதிரி இருந்தது. என்னுடைய லட்சியம் டாக்டராகணும்.அப்பா அம்மாவினுடைய ஆசையும் அதுதான்.
என்கிறார் பெருமையாக.
செல்வகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக