வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ஒரு தபால்தலையில் 324 ஓவியம் தீட்டியவர்!



சிவகுரு பாலாஜி. இவர் ஓவியத்தில் வித்தகர் என்று யாராவது சொன்னால் சட்டென்று நம்பவே முடியாது. ஆனால், அவர் வரைந்திருக்கும் ஓவியங்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்! ஆ! இவரா, இவ்வளவு நுணுக்கமான ஓவியங்களை வரைந்திருக்கிறார் என்று. இவரை யங் ஜீனியஸ் என்று வாயார அழைக்கலாம். ஓவியத்தில் மட்டுமா இவர் வித்தகர்?
இறகுப்பந்து விளையாட்டு, நுண்கலை சிற்பங்கள் உருவாக்குவதில் சாதனை என்று சிறுவயதிலேயே பல திறமைகளையும் கொண்டு வளர்ந்து வருகிறார்.
சிவகுருபாலாஜி,ஈரோடு  எஸ்விஎன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பத்தாம்வகுப்பு படித்துவருகிறார். இவரின் பெற்றோர்கள் சுந்தர் பவர்லுõம் மெஷினுக்கான ஸ்பேர்பார்ட்ஸ் விற்பனை செய்கிறார். அம்மா சாந்தி பட்டதாரி ஆசிரியர். தம்பி சிவசூர்யவாசன் மூணாம்வகுப்பு படிக்கிறார்.
உங்களது திறமைகள் பற்றி?
ஐந்து வயதிலிருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. பள்ளியில் நடக்கும் அனைத்துப் ஓவியப்போட்டிகளிலும் கலந்து கொண்டு நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன்.
தினமலர் சிறுவர்மலர் நடத்திய வண்ணம் தீட்டும் போட்டியில் முதல்பரிசு கிடைத்தது.
ஓவியத்தில் உங்கள் சாதனையாக எதை சொல்வீர்கள்?
 ஒரு அடி நீள, அகல திருவள்ளுவர் படத்திற்குள் 1330 திருக்குறளையும் எழுதி, 2.5 செமீ நீள, அகல புத்தகத்தில் பத்து குறள் வீதம் எழுதியுள்ளேன். அவற்றை பள்ளி  அளவில் ஓவியக்கண்காட்சியில் வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினேன். ஒரு ரூபாய் ஸ்டாம்பின் பின்புறம் 324 ஓவியங்கள்  வரைந்திருக்கிறேன். சாக்பீஸில் கிரீடம்,மிக்கிமவுஸ், சங்கிலி,வேன்,
கார், ரயில், வாள் போன்றவற்றை செதுக்கியுள்ளேன்.
ஓவியம் தவிர வேறு எதிலாவது கவனம் செலுத்துகிறீர்களா?
ஓரிக்காமி என்கிற கலைமூலம் காகித வடிவமைப்பு செய்வது. நிர்வாகத்தில் உபயோகமற்ற கழிவு பொருட்களி லிருந்து புதிய பொருட்களை உருவாக்குவது. ஆங்கிலத்தில் இலக்கணப் பிழை யில்லாமல் சரளமாக பேசுவது, தமிழில் கதைகள்மற்றும் கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறேன். மதுரை பாரதி யுவகேந்திராவின் யுவஸ்ரீகலாபாரதி விருதை பெற்றிருக்கிறேன்.
யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய இறகுப்பந்து போட்டியில் ஈரோடு மாவட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 2007ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றுள்ளேன்.செஸ் மற்றும் கேரம் விளையாடுவேன்.
எதிர்கால ஆசை?
இயற்பியல் துறை அல்லது நானோ தொழில்நுட்பத் துறையில் சாதித்து தமிழ்நாட்டையும் , இந்தியாவையும் உலக அரங்கில் பெருமைப்பட வைக்கவேண்டும்.
 செல்வ குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக