வெள்ளி, 20 ஏப்ரல், 2012

இனிய குரலில் கலக்கும் சவுந்தர்யா




கடுகு சிறதென்றாலும் காரம் குறையாது என்பார்கள். அப்படி இத்தனை சிறுவயதில் தன் மழலை குரலால் குழந்தைகளுக்கான பாடல்களைப் பாடி சினிமாபாடல்கள் மூலம் மற்றவர்கள் மனதை கொள்ளையடிப்பதோடு, தன் இனியை குரலால் பலரையும் கவரந்து வருகிறார் சவுந்தர்யா. அவரை சந்தித்தோம். 
*உங்களைப்பற்றி?
அப்பா ரமேஷ் ஆர்கெஸ்டிரா வைத்திருக்கிறார். அம்மா கீதா பாடகி. ஆர்கெஸ்ட்ராக்கள்ல பி.சுசிலாகுரல்ல பாடுவாங்க. அண்ணன் சக்திவேல், திருவாரூர் அரசு இசைப்பள்ளியில வயலின் கத்துக்கிறார். இன்னொரு அண்ணன் மோகன்ராஜ் பிளஸ் 2 படிக்கிறார். அப்பா தபேலா வாசிப்பார். ராகரஞ்சனின்னு ஆர்கெஸ்ட்ரா வெச்சிருக்கார். நான் லட்சுடம நாராயணன் மிருதங்கம், வாய்ப்பாட்டு கலைஞர்க்கிட்ட பாட்டு கத்துக்கிறேன்.
நான் இந்தவருசம் ஆறாம்வகுப்பு துõய அகுஸ்தினார் நடுநிலைப்பள்ளி,கும்பகோணத்தில படிக்கிறேன். கர்நாடக சங்கீதத்தில பெயர் வாங்கினவங்கள்ல கும்பகோணம் காந்தா என்னோடப்பாட்டி.எங்கதாத்தா சாமிநாதன் தபேலா இசைக்கலைஞர். மொத்தத்தில எங்க குடும்பம் ஒரு இசைக்குடும்பம் னு சொல்லலாம்.


* உங்களுடைய வேறுதிறமைகள்?
நாலுவயதிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, கள்ல பள்ளி அளவிலங மாவட்டஅளவில  லயன்ஸ்கிளப்  நடத்தின போட்டிகள்ல நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்.   
 விளையாட்டில ஆர்வம் இருந்தாலும் அம்மா கலந்துக்க வேண்டாம்னு சொல்லுவாங்க. காரணம் விளையாடற அளவுக்கான  உடம்புவாகு எனக்குக் கிடையாதுனு விளையாட்டுப்போட்டிகள், பயிற்சிகள்ல கலந்துக்க வேண்டாம்னு சொன்னாங்க.

*உங்களுடைய பாடும் திறமை?
குழந்தைகள் பாடல்கள் எல்லாம் பாடுவேன். விழிப்புணர்வு பாடல்கள், கும்பகோணம்  தீவிபத்தில குழந்தைகள் இறந்தது அப்போ நடத்தின நினைவுதின விழாவுல குழந்தைகளுக்காக பாடல் பாடி அனைவரோட பாராட்டையும் வாங்கினேன். கும்பகோணத்தில வழக்கறிஞர் சுகுமாரன்னு அவர் மூலமாக சட்டம் சம்பந்தமாக தகவல்களை பாடல்கள் மூலமாக பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திக்கிட்டிருக்கேன். இந்தியன் படத்தில பொம்மலாட்ட காட்சிவரும் அதுக்காக எங்க அப்பா அம்மா ஆர்கெஸ்ட்ரா குரூப் படத்துக்காக செய்திருக்காங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக