திங்கள், 23 ஏப்ரல், 2012

ஸ்டூடண்ட் டைரி



ஒருநாள் எங்கள் பள்ளியின் மைதானத்தில் நாங்கள் மாணவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் எங்கள் பள்ளிஅறை சுவர்களுக்கு வர்ணம் அடித்திருந்தார்கள். விளையாட்டை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த சமயம். உயர்வகுப்பு படித்துக் கொண்டிருந்த  சில மாணவர்கள் கரிதுகளாலும், பாக்கெட்டில் வைத்திருந்தா பென்சிலாலும் அதில் அவர்களின் பெயர்களையும், கட்சித்தலைவர்களின் பெயர்களையும் எழுதி  வாழ்க! ஒழிக!  என்று எழுதியிருந்தார்கள். மறுநாள் காலை பிரேயர் கூடியது. அப்போது வந்த தலைமையாசிரியர் கடவுள் வாழ்த்துப் பாடும் போது சுவரில் கிறுக்கியிருந்த பெயர்களை பார்த்துவிட்டார். பிரேயர் முடிந்தும் மாணவர்களை நிற்கச்சொன்னார். மாணவ மாணவிகள் அனைவரும் காத்திருந்தார்கள். அப்போது சுவரில் கிறுக்கியது யார் என்று கேட்டார். மாணவர்கள் யாரும் சொல்லவில்லை. எங்களுக்கு அடுத்த உயர் வகுப்பு மாணவர்கள் மட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யாரும் சொல்லவில்லை. உடனே எங்கள் ஆசிரியர் யாரும் தங்கள் தவறை ஒத்துக் கொள்ளாததால் நாளை பிரேயரில் இங்கே ஒரு உண்டியல் வைக்கப்படும் அதில் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஐந்து ரூபாய்கள் போட வேண்டும். இதுதான் தண்டனை இது தவறு செய்த மற்ற மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். மொத்த மாணவர்களுக்கும் நாம் செய்வது தவறு என்பது புரியும். வசூலாகும் மொத்த பணத்திலும் பெயிண்ட் வாங்கி மீண்டும் அடித்துவிட்டு அதன் மேல் தலைவர்களின் படங்கள், பொன்மொழிகள் எழுதப்போகிறோம். ஆசிரியர்கள் இந்தப்பணத்தில் டீ,வடை வாங்கி சாப்பிட இங்கே உண்டியல் வைக்கப்பட வில்லை என்றார்.
மறுநாள் மாணவர்கள்நிறையபேர் காசை கொண்டு வந்து போட்டார்கள். மேலும் .ண்டியலில் போட விரும்பாதவர்கள் ஒவ்வொரு வகுப்பிலம் மாணவர்களே வசூல் செய்து கொண்டு வந்தும் உண்டியலில் போட்டார்கள். நாம் படிக்கும் பள்ளியையும், வீட்டையும் நாம் தானே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

ஆர்.ஜனார்தனன்.
எட்டாம் வகுப்பு,
ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி
துறையூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக