வெள்ளி, 20 ஏப்ரல், 2012

அஷ்டாவதானி அக்ஷரா ஸ்ரீ


யங் ஜீனியர்ஸ்

அஷ்டாவதானி அக்ஷரா ஸ்ரீ

அக்ஷரா ஸ்ரீ யின் சாதனைகளைப் பார்த்தால் இந்த இளம் சாதனையாளரை அஷ்டாவதானி சாதனையாளர் என்றே சொல்லலாம். இவர் பல துறைகளில் பலசாதனைகள் படைத்திருக்கிறார்.


* உங்களுடைய குடும்பம் பற்றி சொல்லுங்களேன்?
அப்பா ரவிச்சந்திரன்எலும்பு மருத்துவர். அம்மா கௌரி ரவிச்சந்திரன் பெண்கள் சிறப்பு மருத்துவராக இருக்காங்க, அண்ணன் ஆனந்த் 9ம் வகுப்பு படிக்கிறார். தம்பி  அரவிந்தாக்சன் 3ம் வகுப்பு படிக்கிறான்.நான் 8ம் வகுப்பு படிக்கிறேன். நாங்கள் மூவரும் ராமநாதபுரத்தில் உள்ளநேஷனல் அகாடமி மாண்டிச்சோரி  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  படிக்கிறோம்.

* பல சாதனை செய்து வரும் உனக்கு குறிப்பாக  எந்தெந்த துறைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கு? 
கர்நாடக சங்கீதம் பாட ஆசை. அதனால், கர்நாடக சங்கீதத்தை முறைபடி ஆரம்பநிலையில் இருந்துசங்கீதபோசனம் கலைவாணி மேடம் கிட்ட கத்துக்கிட்டேன்.
அடுத்து எனக்கு நாட்டியம் என்றால் கொள்ளைப்பிரியம். எனவே,  பரதநாட்டிய கலையை  ரவிமாஸ்டர்க்கிட்ட கத்துக்கிட்டேன்.பரதநாட்டியம் ஓரளவு ஆட தெரிந்தப்பிறகு கோயில்களில் ஆடியிருக்கேன்.
கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டதால் நல்ல பாடமுடிகிறது. பாட்டு கச்சேரி பலமேடைகளில், டிவி நிகழ்ச்சிகளில் பாடியிருக்கேன்.
எனக்கு  ஏழு வகையான இசைக் கருவிகளை  இசைக்கத்தெரியும். அது  புல்லாங்குழல் , மௌத்ஆர்கன், புல்புல்தாரா, ஜலதரங்கம், கிதார், வீணை, கீபோர்டு ஆகியன. இந்த இசைக்கருவிகளில் இப்போது வாசிச்சுக்கிட்டிருக்கேன். இந்த இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு பொதிகை, ராஜ்டிவி, ஸ்டார் விஜயிலும் சில இசை நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். குழந்தைகளுக்கான போட்டி இசை நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டு பரிசுகளும் வாங்கியிருக்கேன்.

* கலைகளில் அசத்தும் நீங்க விளையாட்டில் எப்படி?
விளையாட்டு யாருக்குத்தான் பிடிக்காது? எனக்கு விளையாட்டில் எப்போதுமே ஆர்வம் உண்டு.
நீச்சல், ஸ்கேட்டிங், சைக்கிளிங் போட்டிகளில்  மாவட்ட அளவில் பல முறை முதல் பரிசு வாங்கியிருக்கிறேன்.
 குழுவிளையாட்டுகளான கோகோ, துரோபால் விளையாட்டிலும்  ஐந்தாம் வகுப்பு படிக்கறப்ப போட்டிகள்ல கலந்துக்கிட்டு நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்.
நினைவுத்திறன் போட்டிகள், ஓவியம் பெயிண்டிங்கிலும் முதல்பரிசுகள், ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதும் போட்டியிலும் 68 ம்வகுப்பு மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் இரண்டாம் பரிசு வாங்கியிருக்கேன். இப்படி நிறைய மாதாந்திர இலக்கியப் போட்டிகள், மாவட்ட , மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கியிருக்கேன்.
 பொழுதுபோக்குன்னு சொன்னாலே விளையாட்டும், ஓவியமும் தான் அதிலும் பொழுது போக்குக்கு மேல ஆர்வம் செலுத்தறதால  அந்த பொழுது போக்கும் என்னுடைய திறமைகளை வளர்த்துக்கறதில ஒண்ணாக இருக்கு.  சரின்னு டிவியை பொழுது போக்காக பார்த்தாலும் அதிலும் சங்கீதம் சம்மந்தப்பட்ட விசயங்கள் வர்றப்ப அதிலிருந்தும் ஏதாவது விசயங்கள் கத்துக்க முடியுது. என்னுடைய லட்சியம் அப்பா அம்மாவைப்போல நானும் மருத்துவராகி பலருக்கும் சேவை செய்யணும் என்கிறார் இந்த குட்டி சாதனையாளர்.
 செல்வகுமார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக