வெள்ளி, 20 ஏப்ரல், 2012

யங் ஜீனியர்ஸ்


பிரியதர்சினியை அடையாளப்படுத்த ஒரு முகம் என்றாலும் அவரது திறமைகளை பறைசாற்ற பன்முகத்திறமைகள் அவருக்குள் ஒளிந்திருக்கின்றன. தனது திறமையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் மற்ற சிறுமிகளுக்கு ஒரு முன் உதாரணமாய் விளங்குகிறார் . அவரது திறமைகளும், சாதனைகளும் இங்கே..

* உங்களைப்பற்றி?
என் பெயர் பிரியதர்சினி. நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். மவுன்சியான் மெட்ரிக்குலேசன் ஹையர்செகண்ட்ரி ஸ்கூல்ல படிக்கிறேன். அப்பா எஸ்.மூர்த்தி சிவில் சப்ளையில வேலைப்பார்க்கிறார். அம்மா புவனேஸ்வரி வீட்டிலிருந்து எங்களை ப்பார்த்திருக்கிறாங்க. தாத்தா உமாமகேஸ்வரன் . வீட்ல அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு.
* உங்க கிட்ட பலதிறளைகள் இருக்கிறதா சொல்கிறாங்களே?
பரதநாட்டியம், சிலம்பாட்டம், கராத்தே, பேச்சுப்போட்டின்னு எல்லாத்திலயும் வெளுத்து வாங்குவேன். பரதநாட்டியம் சமீபத்தில தஞ்சாவூர் பெரியகோயில்ல நடந்தது.அதில கலந்துக்கிட்டேன். பரதநாட்டிம் எட்டுவயசுல இருந்து கத்துக்கிறேன். ஹேமந்த்குமார் வெங்கட்ரமணன்,சிலம்பு கடந்த ஐந்து வருசமாக கத்துக்கிறேன். இதுவரை முப்பது மேடைகள் கிட்ட ஆடியிருக்கேன். அந்தோணிராஜ் மாஸ்டர்க்கிட்ட கத்தக்கிறேன். சிலம்பத்தில வேலுõர் மாவட்டத்தில நடந்த தேசிய போட்டியில முதல்பரிசு வாங்கினேன். கராத்தே பாலசுப்பிரமணியன் மாஸ்டர்கிட்ட கத்துக்கிறேன். கராத்தேயில பிரவுன் பெல்ட் மூணும் வாங்கிட்டேன். அடுத்து பிளாக் பெல்ட் வாங்கணும்.பேச்சுப்போட்டியில சின்னவயசுல இருந்து கலந்துக்கறேன். அம்மாதான் எனக்கு பேச்சுப்போட்டிக்கான கருத்துக்களை சொல்லிக்கொடுப்பாங்க. அதனால கலந்துக்கற எல்லாப்போட்டிகளிலும் கண்டிப்பாக ஏதாவது ஒருபரிசு வாங்கிட்டு வந்திடுவேன்.
*  இதுவரை வாங்கின விருதுகள்?
திருச்சி மாணவர் சாதனை அரங்கம் "நாட்டியதாரகை'தந்தது. திஷா மாபா பாண்டியராஜன் அறக்கட்டளை 2008ல இளம்சாதனையாளர் விருது கொடுத்தாங்க. மதுரையில  யுவகலாபாரதி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் "வெற்றிச் செல்வி'விருது கொடுத்தாங்க. இந்தவிருதை கொடுத்தது அமைச்சர் ரகுபதி.  என்னுடைய நாட்டியத்தைப்பார்த்த முன்னாள் வீட்டுவசதித் துறை அமைச்சர்  நல்லுச்சாமி மனைவி ராமேஸ்வரியம்மாள்உன்னுடைய நடனம் அற்புதமாக இருக்குன்னு பாராட்டினாங்க. ஸ்ரீராம்சிட்பண்ட் தமிழ்நாடு பேச்சுப்போட்டி நடத்தியது அதிலும் பரிசு வாங்கினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக