வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பரதத்தில் கலக்கும் சகோதரிகள்



சென்னை கேகே நகரைச் சேர்ந்த  இரண்டு சுட்டிச் சகோதரிகள் இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தில் கலக்கி வருகிறார்கள். அக்கா மிருதுளா ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.தங்கை மிருணாளினி யுகேஜி படிக்கிறாள். மிருதுளா, பூ படத்தில் வரும் சூ..சூ..மாரி பாடலை பாடியிருக்கிறாள்.
இவருடைய அப்பா சிவக்குமார் அம்பத்துõர்ல ஒரு பிரைவேட் கம்பெனில சீனியர் அக்கவுண்டண்டு . அம்மா கவுரி வீட்ல இருக்காங்க. அப்பறம் பாட்டி ராஜி.
பரதம் பயில விருப்பம் வந்தது எப்படி?
என்னுடையமூணாவதுவயசுல நான் பரதம் ஆட ஆரம்பிச்சேன். என்தங்கை  ஒன்பதாவது மாதத்திலேயே பரதம் ஆடஆரம்பிச்சிட்டா.நாங்கள் நடனத்தின் மீது கொண்டு விருப்பத்தை அறிந்து, என் பெற்றோர்  ஸ்ரீமதி ஷீலா உன்னிகிருஷ்ணஜ் மற்றும் ஸ்ரீதேவி நித்யாலயாவிலும் முறைபடி நடனம் பயில விட்டார்கள். முறையாக அடிப்படையில் இருந்து நடனம் கற்றுக்கொண்டு தொடர்ந்து நடனம் ஆடி வருகிறேன்.
நடனம் தவிர வேறு எதிலாவது நாட்டம் உண்டா?
உண்டு. சங்கீதத்தில் நல்ல விருப்பம் இருக்கிறது. ஆதலால், சங்கீதத்தை முறைபடியும் கற்றுவருகிறேன். சமீபத்தில் வெளியான "பூ' திரைப்படத்தில்கூட குழந்தைகள் குரலுக்கான "சூச்சூ மாரி' பாடலைப் பாடி இருக்கேன்.

இதுவரை வாங்கின விருதுகள்?
ஜெயாடிவியில இரண்டு முறை தகதிமிதா நிகழ்ச்சியில 2005,07 ஜெயிச்சிருக்கேன்.துõர்தர்ஷன் கொஞ்சும் சலங்கை நிகழ்ச்சியில கலந்துகிட்டிருக்கேன்.2008 ம்ஆண்டு பெங்களூருவில் நடந்த அகில இந்திய பரதநாட்டிய போட்டியில முதல் பரிசு. தேசிய அளவிலான நாட்டிய போட்டியில்  ஐதாராபாத்தில் 2008,09ம்ஆண்டு முதல்பரிசும் வாங்கியிருக்கேன். மகாபலிபுரத்தில் நடக்கிற நாட்டியவிழாக்களில் கலந்து கொண்டிருக்கி றேன்.ஜவஹர் சிறுவர் மன்றம் நடத்திய நாட்டியவிழாவில் முதல்பரிசுவாங்கியிருக்கேன். என் தங்கை புனேவில் நடந்த குரூப் நடனத்தில் முதல்பரிசு வாங்கியிருக்கா.
உங்கள் லட்சியம்?
பரதத்தில் பெரிய அளவில் வரணும் என்பது தான் என் லட்சியமாக உள்ளது. நாட்டிய தாரகை பத்மா சுப்ரமணியன் போல நானும் வளர்ந்து முன்னேறணும்.

பொழுதுபோக்கு ?
எனக்கு நாட்டியம் தவிர, நிறைய பாட்டு, மியூசிக் கேட்பேன். படிப்பிலும் முதல்இடத்துக்கு வந்திடுவேன். அக்கா சொல்லிக்கொண்டிருக்கும் போதே தங்கை மிருணாளினி தன்னுடைய பொழுதுபோக்கு டிவிபார்ப்பது என்கிறாள்.

- selvakumar.g

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக