வெள்ளி, 20 ஏப்ரல், 2012

விணையிலும், மிருதங்கத்திலும் கலக்கும் சகேதாரிகள்


சென்னை நங்கநல்லுõரைச் சேர்ந்த எஸ்.அஞ்சனி, எஸ்.அஸ்வினி என்கிற இரு சகோதரிகளும் வீணை மற்றும் மிருதங்கம் வாத்தியங்களை இசைப்பதில் இத்தனை சிறிய வயதிலேயே மிகவும் பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் மாலை நேரத்தில் அவர்களது இல்லத்தில் வைத்து சகோதரிகளை சந்தித்தோம்.

*உங்களைப் பற்றி?
அப்பா சீனிவாசன் பிசினஸ் செய்கிறார். அம்மா ரமா சீனிவாசன் வாய்ப்பாட்டு ஆசிரியையாக சொல்லித்தந்தாங்க. இப்போ எங்களுக்கு உதவியாக இருக்காங்க. நாங்க இரண்டு பேரும் ராஜ்குமார்சுலோசனா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில அஞ்சனி பத்தாம் வகுப்பு போகப்போறா, நான் எட்டாம் வகுப்பு போகப்போற÷ன் .
 
*உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது? உங்களின் குரு?
என்னுடைய சிறிய வயதில அம்மா மத்தபசங்களுக்கு வாய்ப்பாட்டு சங்கீதம் சொல்லிக்கொடுத்திட்டு இருந்தாங்க. அப்போன்னு பார்த்து கேள்வி ஞானத்தால நானே ஒரு டப்பாவை எடுத்து தட்ட ஆரம்பிச்சேன். நான் நல்லா ஜதியோட தாளம் தப்பாம அடிச்சதைப்பார்த்த அம்மா முறையாக கத்துக்க ஒரு டோலக் வாங்கிக் கொடுத்தாங்க. அப்படி தாளம் அடிச்சதைப்பார்த்த எங்க குடும்ப நண்பர் சேஷாகலாராமன் சார்  டி.கே.மூர்த்தி சார்க்கிட்ட சேர்த்து விட்டாங்க.என்கிறார் எஸ்.அஷ்வினி. தங்கை சொல்லிமுடிக்கவும் அக்கா அஸ்வினி தன் டசை ஆர்வம் பற்றி சொல்லத்தொடங்கினார். என்னுடைய விணை ஆர்வம் நாங்க குடும்பத்தோட முன்னே வேற வீட்ல வாடகைக்கு குடியிருந்தோம். அப்பபோ அவங்க வீட்ல வீணை இருந்தது. அதுபழசாகி லேசாக சிறு குறைகளோட இருந்தது. அதை என்கிட்ட கொடுத்திட்டு போயிட்டாங்க. அப்பறம் அப்பா அதை சரி செய்து கொடுத்தார். என் தங்கை கேள்வி ஞானத்ததால மிருதங்கம் வாசிக்க ஆரம்பிச்சது மாதிரி நானும் வீணை இயல்பாக வாசிக்க ஆரம்பிச்சிட்டேன். எங்க குடும்ப நண்பரோட உதவியால வீணை காயத்ரி மேடம் கிட்ட வாசிச்சு காட்டினேன். அப்பறம் வீணை காயத்திரியோட அம்மா கமலா அஸ்வத்தாமா என்னுடைய குரு.
*எத்தனை கச்ஙசரிகள் வாசிச்சிருப்பீங்க?
இதுவரை நானுõரு கச்சேரிகள் இருக்கும். பிலாஸ்பூர், ஐதாராபாத், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு  எங்களுடைய ராகவேந்திரா மந்திராலயம் மூலமாக போய் வாசிச்சிட்டிருக்கோம். சிங்கப்பூர் தான் நாங்க முதன்முதல்ல போயிட்டு வந்த வெளிநாடு.

*பாராட்டுக்கள்?
மதுரை தமிழ்இசைச்சங்கம் விருது கொடுடுத்தது,  ரோட்டரி கிளப் மூலமாக சைல்டு பிராடிஜி,ரிலையன்ஸ் இளையராகம் மியூசிக் அகாடமி, இப்படி சபாக்களும், அகாடமிகளும் எங்களை வாழ்த்தியிருக்கின்றன.
* எதிர்கால ஆசை?
விணை காயத்ரி மாதிரி பெரிய ஸ்டாராகணும், என்று அஞ்சனா சொல்ல, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா கூட டி.கே.மூர்த்தி சார் ஐ.நா சபையில மிருதங்கள் வாசிச்ச மாதிரி நானும் அதே சபையில மிருதங்கம் வாசிக்கணும். என்று சொல்லும் அஸ்வினி மேடைக் கச்சேரிகளுக்கு போகும் இடங்களுக்கெல்லாம் அவருடைய அப்பா தான் ஏழு கிலோவிற்கும் அதிகமான எடை உள்ள மிருதங்கத்தை துõக்கி செல்வாராம்.
அதேப்போல இரண்டு , மூன்றுமணிநேரம் வாசித்தாலும் கைவிரல்கள் வலிக்காது அதற்காக பயிற்சி செய்கிறோம்.கலையை விடாம வளர்க்கணும்  என்கிறார்கள்  உற்சாகமாக சகோதரிகள் இருவரும்.
செல்வகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக