வெள்ளி, 20 ஏப்ரல், 2012

சிலம்பம் சுழற்றும் சவுபர்ணிகா



ஆண்கள் மட்டுமே சாதிக்கும் துறை என்று எண்ணும் நிலையில் பலரும் சிலம்பம் சுழற்றும் போது கண்ணில் பட்டுவிடுமோ, தலையை தட்டிவிடுமோ என்று பயந்து நடுங்கும் நிலையில் சமையலுக்கு கரண்டி மட்டுமே பிடிப்பவர்கள் என்பதை பொய்ப்பிக்கும் விதமாக இத்தனை சிறுவதில் தன்னை விட உயரமான சிலம்பத்தை சுழற்றி தேசிய போட்டிகளிலும் பங்கேற்று தங்கமெடல்களை குவித்து வருகிறார் வீரத்திற்கு பேர் போன திருநெல்வேலியைச் சேர்ந்த சவுபர்ணிகா. சிலம்பம் சுழற்றும் அவரிடம் பேசியதிலிருந்து ..
*உங்களுடைய குடும்பம் பற்றி சொல்லுங்க?
எனக்கு சொந்தஊர் திருநெல்வேலி தான். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இருக்கிற பெல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நான் ஆறாம் வகுப்பு (இப்போது பாஸாகி ஏழாம் வகுப்பு உயர்வு பெற்றிருக்கிறார்)  படிக்கிறேன். அப்பா ஜி. நெல்லையப்பன் பஸ் கண்டக்டர்.மதுரை திருநெல்வேலி ரூட்டில் போய்க்கிட்டிருக்காரு. அம்மா என் .சிவகாமி இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்ல சப்த்ரியாக வேலைப்பார்க்கிறாங்க. நான் ஒரே பொண்ணு.

*சிலம்பாட்டத்தில் நீங்கள் சுழற்றி பறித்த பதக்கங்கள்?
  பிப்ரவரி மாதம் பாண்டிச்சேரி மாநிலத்தில் நடந்த சிலம்பாட்டப் போட்டியின்  ஜீனியர் பிரிவில் கலந்து க்கிட்டு தங்கப் பதக்கம் ஜெயிச்சேன். தொடர்ந்து ஆசிய உலகளவிலான போட்டியில பங்கெடுத்துக்கிட்டு தங்கப்பதக்கம் ஜெயிச்சேன். இந்தப்போட்டி  டில்லியில நடந்தது. மொத்தம் ஆறு நாடுகள்ல இருந்து ஒரு நாட்டுக்கு ஒருத்தர் வீதமா கலந்துக்கிட்டாங்க. எல்லாரும் பத்துவயசு தகுதி அளவில கலந்துக்கிட்டாங்க.இது தவிர மாவட்ட அளவிலான போட்டிகள் தென்காசி, மேலப்பாளையம், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகள்ல நடந்தது.அதிலும் பல பதக்கங்கள் ஜெயிச்சிருக்கேன்.

*சிலம்பாட்டத்தில  ஆர்வம் வந்ததெப்படி?
ஐந்து வயசில  இருந்து எனக்கு சிலம்பாட்டத்தில ஆர்வம். எங்க ஊர்  கோயிலில்  தசரா திருவிழா சமயத்தில சிலம்பாட்டம்  நடக்கும். அப்பாக்கூட சிலம்பாட்டத்தை வேடிக்கை பார்க்கப்போனேன். சின்னப்பசங்க நிறையபேர் ரொம்ப நேரம் சிலம்பம் சுத்தறதைப்  பார்த்ததும் , எனக்கும்  சிலம்பம் சுத்தணும்னு  ஆசையாக இருந்தது. உடனே அப்பாக்கிட்ட கேட்டேன். அவரும் சேர்த்து விட்டாரு.
அப்படி விளையாட்டாக தொடங்கின ஆர்வம் இப்போ திருநெல்வேலி மாவட்டம் முழுக்க எனக்கு பேர் வாங்கிக் கொடுத்திருக்கு.  இது தவிர  பேஷ்கட் பால் விளையாடுவேன்.அப்பாவும் கல்லுõரி அளவில பேஷ்கட் பால் விளையாடியிருக்கிறார். இப்போ பேஷ்கட் பால் விளையாட்டு நடக்கிற இடங்களுக்கு அம்பையராக போயி கலந்துக்குவாரு. 14 வயசுக்குள்ளே இருக்கிற சிலம்பாட்டத்தில  நான் தான் பர்ஸ்ட் என்கிறார் பெருமøயாக. இதுதவிர வீட்ல மியூசிக் போட்டுவிட்டு ஆடறது பிடிக்கும், பாடுவேன். பெயிண்டிங்கும் வரைவேன். என்னுடைய சிலம்பாட்ட குரு ஆதிசுந்தரி. இந்திய அளவிலான போட்டிகள்ல நிறைய ஜெயிச்சிருக்காங்க. அவங்களுடைய அப்பா ஏ.சுந்தரம் அவரும் அகில உலக அளவிலான போட்டிகள்ல கலந்துக்கிட்டு ஜெயிச்சிருக்கார். இப்போ நடுவராக பல போட்டிகள்ல கலந்துக்கிறாரு.

செல்வகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக