புதன், 4 ஏப்ரல், 2012

வாழ்க்கைக்கு உதவும் ஐடிஐ படிப்புகள்




அப்படி தொழிற்சாலைகளில் பயிற்சி பெறும் போது அங்கு அவர்கள் பயிற்சி நிறுவனத்தில் கற்றுக் கொண்ட பாடங்களையும், பயிற்சிகளையும் ஒருசேர கற்றுக்கொண்டு இங்கு செய்முறை பயிற்சியை முழுவதுமாக பெறுவார்கள். அதற்கு பயிற்சி பெறும் ஒவ்வொரு மாதமும் பயிற்சிக்கான ஊக்கத் தொகையாக (சம்பளம் ) அரசாங்கமும், தொழிற்சாலை நிறுவனமும் சேர்ந்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். சில தொழிற்சாலைகள் ஒரு மாத சம்பளமாக அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாகவும் ஊக்கத் தொகையினை வழங்குகின்றன. இத்தகைய பயற்சியை மேற்கொள்ளும் போதே ஆர்ஐ எனப்படும் மண்டல தொழிற்பழகுனர் பயிற்சிமையத்தில் வாரம் ஒருநாள் வகுப்புகள் நடத்தப் படுகின்றன. அங்கும் ஐடிஐ பயிற்சி பெறும் போது படித்த பாடங்களான பிளஸ்2, பத்தாம் வகுப்பு பாடங்களைப் போலவே பணிமனைக் கணக்கீடுகள், அறிவியல், பயிற்சி பெற்ற டிரேடு சம்பந்தமான பாடங்கள், இயந்திர உற்பத்திப் பொருட்களின் முப்பரிமாணப் படங்கள் வரைதல், சமூக அறிவியல் போன்ற பாடப்பகுதிகள் மீண்டும் நடத்தப்படுகின்றன. செய்முறை பயிற்சியை மாணவர்கள் தொழிற்சாலையிலேயே பெற்றுக்கொள்வார்கள். இதற்கும் மொத்தம் மதிப்பெண்கள் 700.
பயிற்சி பெறும் தொழிற்சாலையிலும் மாணவர்களுக்கு செய்யவேண்டிய உற்பத்திப் பொருளின் மாதிரிப்படங்கள் தரப்படும். அவைகளை கொண்டு தான் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டியிருக்கும்.
ஓராண்டு அப்ரண்டீஸ் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கிற மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் மீண்டும் ஒரு தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு அகில இந்திய தெழில் பழகுனர் சான்றிதழ் ( புரபஷனல்) வழங்கப்படும். அந்த சான்றிதழைக் கொண்டு மாணவர்கள் தங்கள் படிப்பு சார்ந்த வேலைவாய்ப்புக்ளை வழங்கும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு விண்ணப்பித்து வேலையில் சேரலாம். அரசு சார்ந்த ரயில்வேதுறை, துப்பாக்கித் தொழிற்சாலை, கப்பல் துறை சார்ந்த பணிகள், பாரதமிகுமின் நிறுவனம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் நடத்தும் போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று பணியில் சேரலாம். சொந்தமாக சிறு தொழிற்கூடம் அமைத்து பிரபல கம்பெனிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பினை பெற்று சொந்த தொழில் செய்யலாம். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெறலாம்.
அகில இந்திய தொழிற்தேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மாநில அளவில் மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டு அகில இந்திய அளவில் மீண்டும் தேர்வுகள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகைகளும் வழங்கப்படுகின்றன. தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் காலங்களிலேயே கேம்பஸ் தேர்வுகள் மூலம் பிரபல கம்பெனிகள் மாணவர்களை தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு அளிப்பதும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக